Monday 14 May 2018

வடலூர் சேவை புகைப்படங்கள்



விளமல் ஆலயத்திலிருந்து வடலூர்  காப்பகத்துக்கு ஒரு சேவை:


கடலூர் மாவட்டம், மேட்டுக்குப்பத்தில் தவத்திரு கோவை சிவப்பிரகாச சுவாமிகள்  நடத்திவரும்  இராமலிங்க  வள்ளலார் சர்வதேச தரும பரிபாலன அறக்கட்டளைக்கு, விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தின் (விளமல் சரணாலயம்) சார்பாக கடந்த 13-5-2018 அன்று சில அன்பர்கள் மற்றும் விளமல் அய்யா ஆகியோர், அங்கு இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு, முதியோர்களுக்கு தேவையான  சோப்பு, எண்ணெய், பல் துலக்கி, பற்பசை, விரிப்புக்கள், பாய், போர்வை, எழுது பொருட்கள், துணிகள், நோட்டுகள், மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் வழங்கிட மேட்டுகுப்பம்  சென்றோம்.

சென்ற  வருடத்தைவிட  இந்த வருடம் அதிகமாக கொண்டுவந்து இருக்கிறீர்கள் என சுவாமிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.  பொருட்களை வழங்கிவிட்டு, அவர்களின்  அன்பான மதிய உணவு  உபசரிப்பை  ஏற்றுக்கொண்டு  சுவாமிகளிடம் ஆசி  பெற்று  இரவு 9 மணிக்கு விளமல் ஆலயம் திரும்பினோம்.

இந்த அருட்பணி இந்த வருடமும் சிறப்பாக அமைய உதவி செய்த அண்ணனின் பக்தர்கள் அனைவருக்கும் வடலூர் சிவப்பிரகாச சுவாமிகள் சார்பாகவும் விளமல் ஆலயத்தின் சார்பாகவும் ஆழ்ந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்.